பல படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து மக்களை கவர்ந்தவர் கூல் சுரேஷ். ஆனால் தற்போது பல பட விழாக்களின் பிரமோஷன்களை பேசி தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டு வருகிறார். இதனை தொடர்ந்து செல்வராகவன் நடித்துள்ள பகாசுரன் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கூல்சுரேஷ். பொதுவாக அடுத்தவரின் படத்திற்கு தீவிரமாக செயல்பட்டு ப்ரோமோஷன் செய்யும் கூல் சுரேஷ் தனது படத்தை வித்தியாசமாக பிரமோஷன் செய்ய சர்ச்சைக்குரிய செயலில் ஈடுபட்டு இருக்கின்றார்.

எனவே பகாசுரன் மற்றும் வாத்தி ஆகிய இரண்டு படத்தையும் தியேட்டரில் பார்க்க சென்றுள்ளார். படம் பார்த்துவிட்டு பேசும் சமயத்தில் திடீரென ஒரு பெண்ணை அழைத்து கையை பிடித்துக் கொண்டு விடாமல் முத்தம் கொடுக்குமாறு டார்ச்சர் செய்துள்ளார். அப்போது அந்த பெண் வேண்டாம் சார் விடுங்க என்று கூறினார். எனவே கூல் சுரேஷின் சர்ச்சைக்குரிய செயல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவுகிறது.