பெங்களூர் குடிநீர் வடிகால் வாரியத்தில் தலைமை கணக்கு  அதிகாரியாக பணியாற்றி வரும் விருப்பாக்ஷிப்பாவின் மகன் பிரசாந்த் மாடால். கர்நாடக அரசுக்கு சொந்தமான கர்நாடகா சோப் அண்ட் டிடர்ஜென்ட் நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார் விருப்பாக்ஷிப்பா. இந்த நிறுவனத்தில் மூலப்பொருட்களை கொள்முதல் செய்வது தொடர்பாக ஒப்பந்த புள்ளி கோரப்பட்டிருந்தது. அதற்காக அவரது மகன் பிரசாந்த் லஞ்சம் வாங்கிய போது அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர். அதனை தொடர்ந்து பாஜக எம்எல்ஏ மாடால் விருப்பாக்ஷிப்பா, அவரது மகனும் கர்நாடகா ஆட்சி பணி அதிகாரியுமான பிரசாந்த் மாடல் போன்றோர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்த லோக் ஆயுக்தா போலீஸ் பிரசாந்த் மாடால் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சித்த ராமையா உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் எம்எல்ஏ விருப்பாக்ஷிப்பாவையும் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து தடுப்பு காவலில் அழைத்து சென்றனர். அப்போது சீதாராமைவுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஏராளமான காங்கிரஸ் கட்சி தலைவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.