பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அமிதாப்பச்சன். இவருடைய பேத்தியும் உலக அழகி ஐஸ்வர்யா ராய்-அபிஷேக் பச்சன் தம்பதியின் மகளான ஆராத்யா பாச்சனுக்கு தற்போது 12 வயது ஆகிறது. சமீபத்தில் ஆராத்யா பச்சனுக்கு உடல்நலம் சரியில்லை என்றும் அவருக்கு அரிய வகை நோய் இருப்பதாகவும் 10 youtube சேனல்கள் போலி தகவல்களை பரப்பியது.

போலி செய்திகள் பரப்பிய 10 யூடியூப் சேனல்கள் மீது ஆராத்யா பச்சனின் வழக்கறிஞர்களான நாயக் மற்றும் ஆனந்த் ஆகியோர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆராத்யா மைனர் என்பதால் வீடியோக்களை டெலிட் செய்ய வேண்டும் என்றும் இது போன்ற செய்திகளை ஊடகங்களில் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என டெல்லி ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் 12 வயது ஆகும் ஆராத்யா டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.