பிரபல சின்னத்திரை நடிகை திவ்யா ஸ்ரீதர் தன் காதல் கணவர் அர்னவ் வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு தன்னை அடித்து துன்புறுத்தியதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனையடுத்து அர்னவ் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி அர்னவ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு தொடர்பான விசாரணை இன்று நீதிபதிகள் முன்னிலையில் வந்தது. அப்போது திவ்யா உடம்பில் ரத்த காயங்கள் இருந்ததற்கான மருத்துவ சான்றிதழை காவல்துறையினர் கோர்ட்டில் சமர்ப்பித்தனர். இதைத்தொடர்ந்து அர்னவ் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாகவும், குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டி இருப்பதாலும் அர்னவ் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது எனக் கூறி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் திவ்யா ஸ்ரீதருக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.