துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்க மிருணாள் தாகூர், ராஷ்மிகா உட்ப பலர் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த படம் தான் “சீதா ராமம்”. இந்த படத்தின் வாயிலாக தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை மிருணாள் தாகூர். முதல் முதலில் மராத்தி படத்தின் வாயிலாக அறிமுகமான இவர் ஹிந்தி சீரியல்களிலும் நடித்து உள்ளார். இப்போது இவர் தெலுங்கு சினிமா நடிகர் நானியின் 30-வது படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

நானியுடன் நடிக்கும் திரைப்படத்திற்காக மிருணாள் தாகூர் வாங்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. சீதா ராமம் படத்தில் நடிப்பதற்கு ரூ. 2 கோடி வாங்கிய மிருணாள் தாகூர் இப்போது புதிய படத்திற்காக ரூ.6 கோடி வரை சம்பளத்தை உயர்த்தியுள்ளாராம். நயன்தாரா, சமந்தா, ராஷ்மிகா ஆகிய முன்னணி நாயகிகளே அதிக பட்சமாக ரூ.5 கோடி வரை மட்டுமே சம்பளமாக பெரும் நிலையில், இவர் அதிக சம்பளம் வாங்கியிருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.