கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவிதாங்கோடு பகுதியில் ஸ்ரீதரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் குருநாத் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக குருநாத் வீட்டில் யாரிடமும் அதிகமாக பேசாமல் சோகத்தில் இருந்தார்.

நேற்று காலை கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த குருநாத் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.