திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொங்கலூர் கண்டியன் கோவில் பகுதியில் தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகுமார், விஜயகுமார்(18) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இருவரும் அத்திப்பாளையம் பகுதியில் இருக்கும் ரங்கநாதர் இன்ஜினியரிங் கல்லூரி விடுதியில், தங்கி படித்து வருகின்றனர். இதில் சசிகுமார் இரண்டாம் ஆண்டும், விஜயகுமார் முதலாம் ஆண்டும் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் உடல்நிலை சரியில்லை எனக்கூறி கல்லூரிக்கு செல்லாமல் விடுதியில் இருந்த விஜயகுமார் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து கல்லூரி முடிந்து விடுதிக்கு வந்த பிற மாணவர்கள் விஜயகுமார் தூக்கில் சடலமாக தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விஜயகுமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.