கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் சேர்ந்த 23 வயது இளம்பெண் கோவையில் இருக்கும் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனுடன் படித்த கவுரிசங்கர் என்பவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். இந்நிலையில் கவுரிசங்கரின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதால் மாணவி அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டார். நேற்று மாணவி கல்லூரி முடிந்து ராமநாதபுரத்தில் இருக்கும் பெட்ரோல் பங்க் வழியாக வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது கவுரிசங்கரும், அவரது நண்பரும் மாணவியிடம் சென்று ஏன் பேசுவதில்லை? என கேட்டுள்ளனர்.

அப்போது உன்னிடம் பேசவோ, பழகவோ எனக்கு பிடிக்கவில்லை என மாணவி கூறியுள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோபமடைந்த கவுரிசங்கர் அந்த மாணவியை தாக்கியுள்ளார். மேலும் என்னிடம் பேசாமல் வேறு யாரிடமாவது பேசினால் உன்னை கொன்று விடுவேன் என மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கவுரிசங்கர் மற்றும் அவரது நண்பரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.