திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆர்.எம்.பி.சி காலனி திருவள்ளுவர் நகரில் முகமது ஆரிப் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மதுரையில் இருக்கும் தனியார் கல்லூரியில் பேஷன் டிசைனிங் படித்து வந்துள்ளார். இவருக்கு சபியா என்ற மனைவியும், 1 1/2 மாத ஆண் குழந்தையும் இருக்கிறது. நேற்று முகமது திண்டுக்கல்-நத்தம் சாலையில் ரெட்டியபட்டி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நத்தம் நோக்கி வேகமாக சென்ற கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முகமது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.