திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் பக்தர்கள் வேண்டுதல் நிறைவேறுவதற்காக அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நத்த காடையூரை சேர்ந்த கருப்பண நாடார்(75) என்பவர் உலக நலன் வேண்டி முதுகில் அலகு குத்தினார். மேலும் முதியவர் வேனை பழனி முருகன் கோவிலுக்கு இழுத்துச் சென்று நேர்த்தி கடன் செலுத்தியுள்ளார். இந்த சம்பவம் பக்தர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.