திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கம்பிளியம்பட்டி இந்திரா நகரில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஜனனி தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜனனி அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது வாலிபரை காதலிப்பதாக தனது பெற்றோரிடம் தெரிவித்தார். மேலும் அவரையே திருமணம் செய்து வைக்குமாறு ஜனனி தனது பெற்றோரிடம் கேட்டார். அப்போது பெற்றோர் ஜனனியை கண்டித்து உரிய வயது எட்டியவுடன் திருமணம் செய்து வைப்பதாக தெரிவித்தனர்.

பின்னர் ஜனனியை சமரசம் செய்துவிட்டு பெற்றோர் தூங்கிவிட்டனர். இதனையடுத்து நள்ளிரவு அனைவரும் தூங்கிய பிறகு ஜனனி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மறுநாள் காலை எழுந்த பெற்றோர் ஜனனி தூக்கில் தொங்குவதைக் கண்டு கதறி அழுதனர். அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு ஜனனியை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஜனனி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.