சென்னை மாவட்டத்தில் உள்ள வெங்கடாபுரம் ஆதித்யா பிளாசாவில் சோபா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரவீன்(18) என்ற மகன் இருந்துள்ளார். இவர் நெற்குன்றம் பகுதியில் இருக்கும் கேட்டரிங் கல்லூரியில் படித்துக் கொண்டே பகுதி நேரமாக தனியார் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று மதியம் பிரவீன் மோட்டார் சைக்கிளில் ஆவடி பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது பூந்தமல்லி நோக்கி வந்த அரசு பேருந்து மோட்டார் சைக்கிளின் கைப்பிடியில் உரசியது.

இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த பிரவீன் பின்னால் வந்த டிராக்டர் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்தார். அவரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் பிரவீன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பேருந்து டிரைவர் குமார், டிராக்டர் டிரைவர் செல்வம் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.