கடலூர் மாவட்டத்தில் உள்ள தெற்கு பிச்சாவரம் மணல்மேடு தெருவில் தர்மராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு உதவி பெறும் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளான். கடந்த 20-ஆம் தேதி மணிகண்டன் சிதம்பரநாதன் பேட்டை கிராமத்தில் இருக்கும் மாரியம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தனது பாட்டில் லலிதாவின் வீட்டிற்கு சென்றுள்ளான்.

இதனையடுத்து மாரியம்மன் கோவில் குளத்தில் மணிகண்டன் சடலமாக மிதந்தான். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சந்தேகத்தின் பேரில் அதே கிராமத்தைச் சேர்ந்த ராகுல்(19) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் ராகுல் அடிக்கடி பாட்டி வீட்டிற்கு வரும் மணிகண்டன் உடன் நட்பாக பழகியுள்ளார்.

இந்நிலையில் ராகுலின் அக்காள் குறித்து மணிகண்டன் வேறு ஒரு நண்பரிடம் தவறாக பேசியதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த ராகுல் கோவில் திருவிழாவுக்கு வந்த மணிகண்டனை குளத்திற்கு அருகே அழைத்துச் சென்று கழுத்தை நெரித்து நீரில் அழுத்தி கொலை செய்து விட்டு ஒன்றும் தெரியாதது போல இருந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.