விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி அச்சம்பட்டி தெருவில் காளிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பராசக்தி மாரியம்மன் கோவில் பூசாரியாகவும், கார் டிரைவராகவும் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான காளிமுத்து மது போதை மறுவாழ்வு சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இதனையடுத்து காளிமுத்து தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காளிமுத்துவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.