தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட5 மீன்பிடி படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  அதில் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்  எழுதியுள்ளார்.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அந்த கடிதத்தில் கூறியுள்ளார். மீனவர்களின் உரிமைக்காக மத்திய அரசு மேலும் வலுவாக குரல் கொடுக்க வேண்டும். மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும். பாக். வளைகுடா பகுதியில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பாதுகாக்க வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அந்த கடிதத்தில் குறி உள்ளார்.