தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி காவலர்கள் குழந்தைகளுக்காக கட்டப்பட்ட பள்ளிக்கூடத்தை மூட திமுக அரசு முயற்சி செய்வதாக தற்போது குற்றம் சாட்டியுள்ளார். அதாவது தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தை மேல கோட்டையூரில் உள்ள பள்ளி வளாகத்திற்கு மாற்றுவதற்கு தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது.

இந்நிலையில் மேல கோட்டையூரில் காவலர் குழந்தைகளுக்காக அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட பள்ளிக்கூடத்தை தற்போது திமுக அரசு மூட துடிப்பதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் காவலர் குழந்தைகளுக்காக கட்டப்பட்ட பள்ளிக்கூடத்தை மேல்நிலைப் பள்ளியாக மாற்ற வேண்டும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.