நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்பில் சேர்வதற்கான CUET தேர்வுக்கு விண்ணப்பங்கள் மீண்டும் பெறப்படுகின்றன. CEUT UG தேர்வுக்கு விண்ணப்பங்கள் பெறும் பணி கடந்த மார்ச் 30ஆம் தேதியோடு முடிவடைந்தது. இந்த நிலையில் மீண்டும் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்த நிலையில் அதற்கேற்ற ஆன்லைனில் விண்ணப்பங்களை மீண்டும் பெற்றது.

எனவே CUET UG தேர்வுக்கு  ஏப்ரல் 11ஆம் தேதி வரை மாணவர்கள் https://cuet.samarth.ac.in/என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஏப்ரல் 13 வரை கால அவகாசம்  நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 011-40759000 என்ற தொலைபேசி பெண்ணை அணுகவும்.