நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணம் 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இதுவரை இந்த திட்டத்தின் கீழ் 13 தவணைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் 14 வது தவணை தொகையை விவசாயிகள் காத்திருக்கின்றனர். வருகின்ற ஜூலை மாதத்திற்குள் 14ம் தவணை செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிஎம் கிசான் திட்டத்தில் எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

அதற்கு முதலில் https://pmkisan.gov.in/ இணையதளத்துக்கு செல்லவும்.

அதில் Farmers Corner பகுதிக்கு சென்று New Farmer Registration பகுதியை கிளிக் செய்யவும்.

உங்கள் ஆதார் எண் பதிவிடவும்.

Click here to continue கிளிக் செய்யவும்.

அதன்பிறகு YES கிளிக் செய்து பிஎம் கிசான் பதிவு படிவத்தை பூர்த்தி செய்யவும்.

பூர்த்தி செய்த படிவத்தை save செய்து print out எடுத்துக்கொள்ளவும்.

தேவையான ஆவணங்கள்:

ஆதார் அட்டை

நில ஆவணங்கள்

குடியுரிமை சான்று

வருமான சான்று

வங்கி கணக்கு விவரம்

மொபைல் எண்

பாஸ்போர்ட் சைஸ் போட்டோ