மதுரை மாவட்டத்திலுள்ள அய்யர் பங்களா பகுதியில் கார்த்திக் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்கள் இரண்டு பேருடன் தேனி மாவட்டம் கொழுக்குமலை பகுதிக்கு காரில் சுற்றுலா சென்றார். அவர்கள் அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்துவிட்டு மீண்டும் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் போடிமெட்டு மலை பாதையில் 13-வது கொண்டை ஊசி வளைவில் சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த மூன்று பேரும் காயம் இன்றி உயிர் தப்பி விட்டனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.