கேரள மாநிலம் கொச்சியில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பேரணியில் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர், ராகுல் காந்தியிடம் கேள்வி கேட்க முன்வந்து மைக்கை வாங்கினார்.
“வங்காளம் (Bengal) ஏன் இவ்வளவு மோசமாகப் பின்தங்கியுள்ளது?” (Bengal itna ghisa hua kyun hai?) என்ற தொனியில் அவர் கேள்வி கேட்கத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
Rahul Gandhi’s mohabbat ki dukaan on display-
A kid asked Rahul something about Bengal in Hindi
Rahul’s team immediately shut him up & snatched his mic
The kid even said that Rahul knows Hindi & can answer
But look at how they treated him, & JanNalayak Gandhi just stood there… pic.twitter.com/8d9C9yYH37
— Political Kida (@PoliticalKida) January 19, 2026
அவர் கேள்வி கேட்டு முடிப்பதற்குள், அங்கிருந்த காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் பாய்ந்து வந்து அந்த இளைஞரின் கையிலிருந்த மைக்கைப் பிடுங்கினர்.
இதனால் அங்குக் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. கருத்து சுதந்திரம் பற்றிப் பேசும் காங்கிரஸ் கட்சியில், ராகுல் காந்தியிடம் கேள்வி கேட்க முயன்ற இளைஞரைத் தடுத்தது ஏன் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதேசமயம், அந்த இளைஞர் ராகுல் காந்தியை வம்புக்கு இழுக்கும் நோக்கில் கேள்வி கேட்டதால் தொண்டர்கள் ஆத்திரமடைந்ததாகக் காங்கிரஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ‘டிரெண்ட்’ ஆகி வருகிறது.
