ஒவ்வொரு நாளும் சமூக ஊடகங்களில் பல வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஐஸ்கிரீம் வாங்க முயற்சிக்கும்போது ஒருவர் செய்த சிறிய தவறு எவ்வளவு பெரிய ஆபத்தாக மாறியுள்ளது என்பதை உணர்த்தும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று தற்பொழுது இணையத்தை ஒட்டுமொத்தமாக உலுக்கி வருகிறது.

ஒருவர், தனது வீட்டின் முதல் மாடி பால்கனியில் நின்று கொண்டிருந்த போது, கீழே தெருவில் ஒரு ஐஸ்கிரீம் வண்டி செல்வதைக் கண்டு அதனை நிறுத்தியுள்ளார்; இருப்பினும், கீழே இறங்கி வந்து ஐஸ்கிரீம் வாங்கச் சோம்பேறித்தனமாக இருந்த அந்த நபர், பால்கனியிலிருந்து ஆபத்தான முறையில் தன் கைகளை நீண்ட தூரத்திற்கு நீட்டி ஐஸ்கிரீம் கேட்டுள்ளார்.

இதைக் கண்ட கீழே இருந்த ஐஸ்கிரீம் விற்பனையாளரும் தன் கையை நீட்டி அவருக்கு ஐஸ்கிரீம் கொடுக்க முயன்ற போது, பால்கனியில் இருந்த அந்த நபர் ஐஸ்கிரீமைத் தொடுவதற்காகச் சற்று முன்னோக்கிச் சாய்ந்துள்ளார், ஆனால் அடுத்த கணமே எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி அவர் மேலிருந்து நேராகக் கீழே விழுந்துள்ளார்.

கீழே இருந்த வியாபாரியும், சுற்றியிருந்த மக்களும் பார்த்துக் கொண்டிருக்கும்‌ போதே கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த கோரமான சம்பவம் அங்கிருந்த கேமராவில் பதிவாகி, தற்பொழுது  பலரால் பகிரப்பட்டு எக்ஸ்  தளம் மற்றும் சோசியல் மீடியாக்களில் தீயாய் பரவி வருகிறது.

<a href=”http://

“>

கீழே விழுந்த அந்த நபருக்கு என்ன மாதிரியான காயங்கள் ஏற்பட்டன மற்றும் அவரது தற்போதைய நிலை குறித்த விபரங்கள் இதுவரை வெளியாகாத நிலையில், நமது அன்றாட வாழ்வில் நாம் செய்யும் ஒரு சிறிய அலட்சியமும் சோம்பலும் எவ்வளவு பெரிய ஆபத்திற்கு வழிவகுக்கும் என்பதற்கு இந்தச் சம்பவமே சான்று என இணையவாசிகள் இந்த வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர்.