ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவில் சட்டவிரோத மணல் கடத்தல் கும்பலைத் துரத்தியபோது, ஒரு போலீஸ்காரர் செய்த துணிச்சலான செயல் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மணல் கடத்திச் சென்ற டிராக்டரை நிறுத்த முயன்றபோது, டிரைவர் வண்டியை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றார்.

அப்போது, சற்றும் யோசிக்காத அந்த மாவட்ட சிறப்புப் படை (DST) காவலர், ஓடும் டிராக்டர் மீது சினிமா பாணியில் பாய்ந்து ஏறி டிரைவரைப் பிடிக்க முயன்றார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த டிரைவர், காவலரைத் தூக்கி எறியும் நோக்கத்தில் டிராக்டரை சாலைத் தடுப்பு (Divider) மீது மோதச் செய்தார்.

பின்னர், டிராக்டர் ஓடிக்கொண்டிருக்கும் போதே டிரைவர் கீழே குதித்துத் தப்பி ஓடிவிட்டார். அதிர்ஷ்டவசமாக அந்த வீரமான காவலர் காயமின்றி உயிர் தப்பினார்.

தற்போது அந்த டிராக்டரை பறிமுதல் செய்துள்ள போலீசார், சிசிடிவி (CCTV) காட்சிகளை வைத்துத் தப்பியோடிய டிரைவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.