கனடாவில் கடமையில் இருந்த மோப்பநாய் ஒன்று பணி நிமித்தமாக உயிர் இழந்துள்ளது. டாஸ் எனும் பெயருடைய அந்த மோப்ப நாய் காவல்துறை அதிகாரிகளுடன் போதைப்பொருள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தது. அந்த சமயத்தில் அளவுக்கு அதிகமாக போதை பொருளை நுகர்ந்து பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் டாஸ் மற்றும் அதனுடன் இன்னொரு நாயும் உடல் நலக் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாய்களையும் அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர் ஆனால் டாஸ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. டாஸ் மூலமாக போதை பொருளும் அது தொடர்புடைய குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பணியின் நிமித்தமாக  பாதிக்கப்பட்டு மோப்ப நாய் டாஸ் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.