உதயநிதி பேசாததை பேசியதாக கூறி அவதூறு பிறப்புவதா என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

தமிழக முதலமைச்சரின் மு.க ஸ்டாலின் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். அதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசாத ஒன்றை பேசியதாக பிரதமர் அவர்கள் கூறுவது ஏன் ? எனவும் கேட்டு இருக்கின்றார். சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன எதிர்ப்பு மாநாட்டிலே உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  சனாதனம் குறித்து பேசி இருந்தார்.

சனாதனம் குறித்து பேசிய விவகாரம் என்பது வட இந்தியாவில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தி இருக்கின்றது. குறிப்பாக பாஜக மற்றும் இந்து மத சமயம் சார்ந்த சாமியார்கள் உள்ளிட்ட பலரும் இதற்கு கடனத்தை பதிவு செய்து வருகிறார்கள். இந்த நிலையிலே பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடைய கருத்துக்களை குறிப்பிட்டு முதலமைச்சர் ஸ்டாலின்  ஒரு அறிக்கையை கொடுத்திருக்கின்றார்.

அந்த அறிக்கையிலே பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு இருக்கின்றார். அதில் குறிப்பாக உதயநிதி அவர்கள் பேசாத ஒன்றை பேசியதாக பிரதமர் கூறியிருக்கின்றார். அப்படி பரப்பப்பட்ட ஒரு விஷயத்தை தெரிந்து பிரதமர் கூறுகிறாரோ அல்லது தெரியாமல் கூறுகிறாரா ? என்று கேள்வி எழுப்பியிருக்கின்றார்.