அமைச்சார் உதயநிதி ஸ்டாலின் மீது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆளுநர் ஆர்.என் ரவியிடம் புகார் அளித்துள்ளார். பெரியாரை பின்பற்றும் உதயநிதி சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசிய பேச்சால் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் மனம் புண்பட்டுள்ளது. உதயநிதியின் வெறுப்பு பேச்சுக்கு எதிராக காவல் நிலையங்கள் பாஜக புகார் அளித்தது.

தமிழகத்தில் அமைதியை  குலைக்க முயற்சிக்கிறார் உதயநிதி. முதலமைச்சரின் மகன் என்பதால் உயர்நீதி மீது போலீஸ் வழக்கு பதிவு செய்யவில்லை. உதயநிதி மீது வழக்கு பதிவு செய்யுமாறு டிஜிபிக்கு ஆளுநர் உடனடியாக உத்தரவிட வேண்டும் என தமிழக ஆளுநருக்கு அண்ணாமலை புகார் கடித்த கொடுத்துள்ளார்.