தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு திமுக அரசை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,

ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் கொசுக்களால் பரவும் வைரஸ் தொற்று நோயான டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின்  எண்ணிக்கை அதிகரித்து வருவதும்,  அதன் மூலம் உயிரிழப்பு ஏற்பட்டுவதும் வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு காரணமாக சென்னை மதுரவாயில் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த திரு. அய்யனார் என்பவரின் நான்கு வயது மகன் செல்வன் ரக்க்ஷன் நேற்று முன்தினம்,

டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளான் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும்,  மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும்,  அனுதாபத்தையும் முதற்கண் தெரிவித்துக் கொள்கின்றேன். மாநகராட்சி சென்னை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட மதுரவாயில் பகுதியில் குடிநீர் வசதி சரிவர செய்து தரப்படவில்லை என்றும்,  மாநகராட்சி லாரிகள் மூலம் அளிக்கும் தண்ணீரை பிடித்து வைத்து பல நாட்கள்  பயன்படுத்தும் அவல நிலை அப்பகுதியில் நிலவுவதாகவும்,

ஆங்காங்கே கழிவு நீர் தேங்கியுள்ளதன் காரணமாக கொசு உற்பத்தி பெருகி உள்ளதால் இப்பகுதியில் டெங்கு உள்ளிட்ட  நோய்கள் அதிகமாக பரவி வருவதாகவும்,  சென்னை மாநகராட்சியிடம் இதுகுறித்து புகார் அளிக்கும் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்றும், சிறுவனின்  உயிரிழப்புக்கு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களின்  அலட்சியபோக்கே கரணம் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

திமுக அரசின் அலட்சியப் போக்கு  கடும் கண்டனத்துக்குரியது. திமுக அரசின் அலட்சிய போக்கினால் சிறுவனின் உயிரிழப்பு ஏற்பட்டிருப்பதால்,  உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு நிவாரண உதவி அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அண்டை மாநிலமான கேரளாவில் சென்ற ஆண்டை  ஒப்பிடுகையில் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 132 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும்,  முதல் ஆறு மாதங்களில் கிட்டத்தட்ட 3400 பேர் டெங்குால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கர்நாடக மாநிலத்திலும் சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் டெங்கு காய்ச்சலால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 விழுக்காடு அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.  ஆந்திரபிரதேசம், தெலுங்கானா, உத்தரகாண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து ஆயிரக்கணக்கானோர்  பாதிக்கப்பட்டுள்ளனர்.டெங்கு என்பது ஒரு வகை தொற்று நோய் என்பதையும், அண்டை மாநிலங்களில் இதன் தாக்கம் அதிகரித்து வருவதையும் கருத்தில் கொண்டு, குடிநீர் வசதி இல்லாத பகுதிகளில்… தினசரி குடிநீர் விநியோகம்

செய்யவும், கழிவுநீர் சாலைகளில் தேங்காமல் இருப்பதை உறுதி செய்யவும், இது குறி த்த விழிப்புணர்வை மக்களிடையே  ஏற்படுத்தவும்,  நோயின் அறிகுறி இருப்பவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு சிகிச்சையினை  அளித்து,  நோய் நீங்குவதற்கான மருத்துவத்தினை செய்யவும், டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு என்ற நிலை உருவாவதை தடுக்கவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்என அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்க்கு கொள்கின்றேன் என 3 பக்க அறிக்கை வெளியிட்டுள்ளார்.