செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் விஜய் பாட்டை அவர் பாட்டுக்கு வெளியிட்டு போப்போறாரு. இதுக்கு எது காரணம்? அவர் அரசியலுக்கு வர போறாருன்னு தெரியுது. அவருக்கு நெருக்கடி கொடுக்கிறிங்க… நீங்க எவ்ளோ அழுத்துனாலும்… இந்த பக்கம் அழுத்துனீங்கனா…  பந்து அந்த பக்கம் பிச்சிக்கிட்டு போவும்…

அங்க அழுத்துனா…  இந்த பக்கம் பிச்சிகிட்டு வரும். பந்து மேல வரணும்னு முடிவு பண்ணிடுச்சி…  அது எத்தனை பேர் அழுத்துனாலும் பிச்சிகிட்டு வரும்… நீங்க ஒன்றை கவனிச்சுக்கோங்க… எறியணும்னு முடிவு எடுத்த நெருப்பை,  எவ்வளவு குப்பையை போட்டு மூடுனாலும் அணைக்க முடியாது, விஜய் அரசியலுக்கு வராரு .. வேற எதனால இந்த நெருக்கடி ?

இப்போ சீமான் இருக்கேன்ல… சீமான் என்கிறவன 10 வருசத்துக்கு முன்னாடி ஏன் இந்த மாதிரி அவதூறுகள்,   வழக்குகள்,  அது எல்லாம் போட்ட…  இப்படி பண்ணல? அவன் வளருறான்… அவன் வந்துட்டான்… அவனுக்கு ஒரு செல்வாக்கு கூடிட்டே போகுது. மக்கள் அவன் பின்னாடி திரளுறாங்க. அப்படிங்கும்போது உனக்கு தூக்கம் வர மாட்டிங்குது.

அவனை என்ன பண்ணலாம் அப்படின்னு யோசிச்சிட்டு இருக்கீங்க ?   10 வருசத்துக்கு முன்னாடி நான் யாருக்கு தெரியும் ?  யாரது கேட்டீங்களா ? எவ்வளவு வழக்கு போட்டிடீங்க ?  128 வழக்கு போட்டீங்களா என்மேல…  அவுங்களுக்கு தெரியுது. பிரச்சனை இருக்குது. ஐ.எஸ் ரிப்போர்ட் போகும்ல… காசு கொடுக்காம பல்லாயிரம் கணக்குல கூடுறாங்க… 

வெறும்  பசங்களா கூடுறாங்கப்பா? கத்துறாங்கப்பா? என தெரிஞ்ச உடனே உனக்கு தூக்கம் வராது. அதானே.. அதான் விஜய் வரான்ன்னு தெரிஞ்சவுடனே… ஐயோ இவன் வேறயா? அப்படினு வருது. இருக்குற ஒருத்தனை சமாளிக்க முடில. இதுல இன்னொருத்தன் வாரான், அதான் பிரச்சனை என தெரிவித்தார்.