தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் வெண் புள்ளிகள் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் வருகின்ற அக்டோபர் 11ஆம் தேதி முதல் இறைவணக்க நேரத்தின் போது வெண்புள்ளிகள் குறித்து மாணவர்கள் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.