நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சற்று முன் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அப்போது இந்தியாவின் பொருளாதாரம் சரியான ஒளிமயமான பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று கூறினார். மேலும் ஏழைகளுக்கான உணவு திட்டத்தில் அடுத்த ஒரு வருடத்திற்கு இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தற்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.