நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சற்று முன் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அதன் பிறகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உலகளாவிய பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கிறது என்றும், இந்திய பொருளாதாரம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்றும் கூறினார். அதன் பிறகு உலக பொருளாதாரத்தில் ஒளிரும் நட்சத்திரமாக இந்தியா விளங்குகிறது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் 9.6 கொடி சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.