தமிழ்நாட்டில் 2030க்குள் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். ஒரு கான்கிரீட் வீட்டிற்கு ரூ.3.50 லட்சம் வழங்கப்படும். இந்த நிதி தகுதியான பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும், ஊரகப் பகுதிகளில் ரூ.365 கோடியில் 2,000 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.