அதிமுக விருப்ப மனு வரும் 21ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர், வரும் பிப்ரவரி 21ஆம் தேதி முதல் மார்ச் 1ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இந்த மனுக்களை பெற்றுக் கொள்ளலாம். விருப்ப மனுக்கள் பூர்த்தி செய்யப்பட்டு, தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். தினமும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை மனுக்களை உரிய கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.