கீழடி, வெம்பக்கோட்டை, கீழமண்டி உள்ளிட்ட 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். கர்நாடகா, ஒடிசாவிலும் அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்படும் என்று கூறிய அவர், தமிழகத்தில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள ரூ.5 கோடி நிதி ஒதுக்குவதாகவும் அறிவித்துள்ளார். மேலும், கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் ரூ.17 கோடியில் அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.