தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனர் விஜயகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பிறகு அவர்  உடல்நலம் குணமடைந்து வீடு திரும்பினார் என்று மருத்துவ அறிக்கை வெளியாகி, தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் நடந்த பொதுக்குழு – செயற்குழு கூட்டத்திலும் கலந்து கொண்டார்.

அந்த பொதுக்குழுவில் தேமுதிகவின் பொதுச்செயலாளர் பொறுப்பு தேமுதிகவின் பொருளாளராக இருந்த பிரேமலதாவுக்கு வழங்கப்பட்டது. பொதுக்குழுவிலேயே விஜயகாந்த் உடல்நிலையை கண்டு தொண்டர்கள் பலரும் கதறி அழுத நிலையில்,  தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொண்டர்களை பெறும் கவலை கொள்ள செய்துள்ளது.