மிக்ஜாம்பு புயல் பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடியை திமுக எம்பி TR.பாலு சந்தித்து பேசியுள்ளார்.  மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு இடைக்கால நிவாரணமாக 5060 கோடி வழங்க கோரிக்கை வைத்துள்ளார். இடைக்கால நிவாரணம் கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை டி.ஆர் பாலு பிரதமர் மோடியிடம் வழங்கினார்.பிரதமர் மோடியை சந்தித்த டி.ஆர் பாலு அடுத்து, உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திக்க உள்ளார்.