சென்னை உட்பட நான்கு மாவட்டங்களை தமிழகத்தில் புரட்டி எடுத்த மிச்சாங் புயல் 110 கிலோமீட்டர் வேகத்தில் ஆந்திர மாநிலத்தில் கரையை கடந்தது. இதனால் 10 மாவட்டத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு 40 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து முதல்வர் ஜகன்மோகன் ரெட்டி தலைமையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் களப்பணியில் ஈடுபட்டிருந்த சுற்றுலாத்துறை மந்திரியும் நடிகையுமான ரோஜா மழையை ரசித்து நடனமாடியுள்ளார். இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியான நிலையில் மக்கள் துயரப்படும் வேளையில் மந்திரி நடனம் ஆடியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.