சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளர் தோல்வி அடைந்ததை தொடர்ந்து தொண்டர் ஒருவர் ஒரு பக்க தலைமுடி மற்றும் மீசையை எடுத்துள்ளார். அல்லாரி தொகுதியில் பாஜக வேட்பாளர் அல்கா சந்திரகர் தோல்வியடைந்தால் ஒரு பக்க மீசை மற்றும் தலைமுடியை எடுத்துக் கொள்வதாக டெர்ஹா ராம் யாதவ் என்பவர் தனது நண்பரிடம் பெட் கட்டியுள்ளார். தேர்தல் முடிவில் பாஜக வேட்பாளர் தோல்வி அடைந்ததால் அவள் சொன்னபடி மீசை மற்றும் முடியை எடுத்துக் கொண்டார்.