புயல், மழை எச்சரிக்கையை அடுத்து 4 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதி கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

நாளை மறுநாள் மிக்ஜம் புயல் நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே  கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. நாளை அதி கன மழை பெய்யும் என்பதால் இந்த 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அதே போல ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி,  கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவு பிறப்பித்துள்ளார். விழுப்புரம் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் பழனி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.