தமிழக அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த இருக்கின்றது. சென்னை சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகின்றது. 2008இல் வீட்டு வசதி வாரியத்தின் வீட்டை கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசனுக்கு ஒதுக்கிய விகாரம். வீட்டு வசதி வாரிய வீடுகள் ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் விடுவிக்கப்பட்டார். அமைச்சர் ஐ. பெரியசாமியை சிறப்பு நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை எடுத்துள்ளார்.