சிறப்புப் பாதுகாப்புக் குழுவின் (SPG) இயக்குநர் அருண் குமார் சின்ஹா ​​(61) ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மருத்துவமனையில் காலமானார். இவர் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தா நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் படை இயக்குநர் அருண்குமார் சின்ஹா மறைவிற்கு முதல்வர் மு.க  ஸ்டாலின்  இரங்கல் தெரிவித்துள்ளார். அதன்படி, அருண்குமார் சின்ஹாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், சக அதிகாரிகளுக்கும் ஆழ்ந்த இரங்கல் என முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.