திருப்பத்தூர் வாணியம்பாடி அருகே இன்று அதிகாலை வேன் மீது லாரி மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஏழு பெண்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேனில் சுற்றுலா சென்று வீடு திரும்பிய போது லாரி மோதிய விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.