தமிழகத்தில் அதிக கன மழை காரணமாக தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். வெள்ளத்தால் மூழ்கிய பகுதிகளில் சிக்கிய மக்களை மீட்பு படையினர் மீட்டு வருகிறார்கள்.