தமிழகத்தில் பல மாவட்டங்களில் கன மழை பெய்த நிலையில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கனமழை குறைந்துள்ள நிலையில் தென்காசி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் நாளை வழக்கம் போல செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

அதிக கன மழை காரணமாக நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் மழை பாதிப்பு சற்று குறைவாக காணப்படுகிறது. நாளை அங்கு எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. இதனால் டிசம்பர் 19ஆம் தேதி நாளை தென்காசியில் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.