தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு காவல்படை ASP ரவிச்சந்திரன் திருச்சி துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். விழுப்புரம் ASP ரமேஷ் பாபு ஐகோர்ட் பாதுகாப்பு துணை ஆணையராகவும் அரியலூர் ASP மலைச்சாமி சொத்து உரிமை அமலாக்கத்துறை SPயாகவும், சேலம் சைபர் ASP செல்லப்பாண்டியன் ஆவடி சிறப்பு காவல்படை SPயாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.