மும்பை – ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆர்.பி.எஃப் காவலர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பயணிகள் ஒரு பாதுகாப்புப்படை வீரர் என மொத்தம் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஓடும் ரயிலில் துப்பாக்கிச்சூடு நடத்தி 4 பேரை கொன்றுவிட்டு, தப்பிக்க முயன்ற சேத்தன் என்பவரை, போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்தில் பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.