சிக்னல் பிரச்னை காரணமாக, திருச்சியில் இருந்து புறப்படும், திருச்சி – ஈரோடு, திருச்சி-தஞ்சாவூர், திருச்சி – கரூர் உள்ளிட்ட 8 முன்பதிவில்லா ரயில்கள் இயக்கப்படாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதேபோல், சீரமைப்பு பணி நடைபெற்று வருவதால், பாண்டியன், நெல்லை, பொதிகை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட தென் மாவட்ட ரயில்கள் சுமார் 5 மணி நேரம் தாமதம் ஏற்பட்டுள்ளதால், பயணிகள் அவதியடைந்துள்ளனர்.