தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் வீடு இழந்தவர்கள் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். தூத்துக்குடியில் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்த அவர், வீடு இல்லாதவர்களும் வீடு கோரி விண்ணப்பித்தால் பரிசீலனை செய்யப்படும் என்று கூறினார். இறந்த ஆடு, மாடுகளுக்கான இழப்பீட்டை உடனடியாக வழங்க மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.