பண்டிகை நாட்களில் கூட குடும்பத்தினருடன் இல்லாமல், சேவை செய்யும் போக்குவரத்து ஊழியர்களின் பிரச்னைகளை தமிழக அரசு உடனே தீர்க்க வேண்டும் என விஜயகாந்த் காட்டமாக தெரிவித்துள்ளார். குறிப்பாக, போக்குவரத்து ஊழியர்களின் சம்பளத்தை உடனே உயர்த்த வேண்டும்; ஓய்வு பெறும்போது பணப் பலன்களை உடனே விடுவிக்க வேண்டும். காலியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.