தமிழகத்தின் வட உள் மாவட்டங்களில் மே 1 முதல் வெப்ப அலை உச்சத்தை தொட வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார். மாநிலத்தில் 46 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப அளவு பதிவாகக் கூடும் என்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என தெரிவித்துள்ளார். மேலும் மே ஐந்து முதல் உள் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் இடம் தெரிவித்தார்.