தமிழகத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி கொடுக்க பணம் பெற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாகத் துறை தரப்பில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி மனு வழங்கியிருந்தார். இந்நிலையில் ஜாமீன் மனுவை விசாரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுந்தர் மற்றும் சக்திவேல் அமர்வில் செந்தில் பாலாஜி முறையீடு செய்தார்.

ஆனால் இந்த மனுவை நாங்கள் எப்படி ஏற்க முடியும் என கேள்வி எழுப்பி தலைமை நீதிபதி இடம் முறையிட இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் நீதிபதி சக்திவேல் ஏற்கனவே விலகி இருந்த நிலையில் அவரிடமே தற்போது முறையீடு செய்யப்பட்டுள்ளது.